மஹிந்த தலைமையிலான தென் கொரியா விஜயம் வெற்றி

Published By: Ponmalar

15 Aug, 2016 | 06:31 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியின் தென் கொரியாவிற்கான விஜயம் வெற்றியளித்துள்ளது. அந்நாட்டின் அரச தலைவர்கன் மற்றும் இலங்கையர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகயில் ஈடுப்பட்டதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் நாட்டிற்கு எதிரான நெருக்கடியான நிலைமைகள்  தொடர்பில் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுய நல அரசியலுக்காக கூட்டு எதிர் கட்சியினர் தென் கொரியாவிற்கு செல்லவில்லை. உலக நாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க விரும்புகின்றனர். அதே போன்று அவர்கள் சமகால சூழல் தொடர்பில் அறிந்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்நிலையிலேயே நாங்கள் தென் கொரியாவிற்கு சென்றிருந்தோம். 

சுமார் 400 ஆயிரம் இலங்கையர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டோம். அதே போன்று அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் சநதித்தோம். தென் கொரியாவிற்கான இலங்கையர்களின் வேலை வாய்ப்பு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவை மகத்தானது. இதனை பல்வேறு சந்திப்புகளின் போது அவதானத்திற்கு உட்பட்டது என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02