எம்.சி.சி உடன்படிக்கை குறித்த முக்கிய விடயத்தை வெளியிட்ட சட்ட மா அதிபர்

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 03:00 PM
image

(செ.தேன்மொழி)

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். 

இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கபட்டுள்ள , அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் சோபா ஒப்பந்தத்தில் , அரசாங்கம் கைச்சாத்திடுவதை தடுப்பதற்காக இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குறிப்பிட்டு  அரச வைத்திய அதிகாரிகளால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் , இந்த மனு இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் , இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த , மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் இலங்கை அரசாங்கம் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திலும் , அமெரிக்க இராணுவத்தினர் இந்நாட்டில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுமதி வழங்குவதற்கான சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பான பரிசீலனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள உயர்நீதிமன்றம் , அதன்போது  இந்த தீர்மானங்கள் தொடர்பான எழுத்து மூல ஆவணங்களை மன்றில் சமர்பிக்குமாறு மேலதிக சொலிஸ்டர் ஜெனராலுக்கு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43