இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர் யூசெப் பின் அகமட் அல்-ஒத்தெய்மினுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய சடங்குகளின்படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்று, சர்வதேச அமைப்புகளை அணுகவும், அணுகவும் இலங்கை ஜனாதிபதியின் விருப்பத்தை அல்-ஓதமைன் இதன்போது பாராட்டினார்.
முஸ்லிம் சமூகங்களின் நிலைமைகளைப் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அல்லாத உறுப்பு நாடுகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆர்வத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறுகோரி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடுகள் பலவற்றுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இத்தகைய பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டாக விளங்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இதுகுறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசுப் அல் ஒதைமீனுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் இதன்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினரின் நிலை குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் இலங்கை ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பையும் திறந்த மனதுடன் சர்வதேச அமைப்புக்களை அணுகுவதற்கான அவரது விருப்பத்தையும் பாராட்டிய யூசுப் அல் ஒதைமீன், முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பையும் வெளியிட்டார்.
அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பதோடு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிசெய்வதிலும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக யூசுப் அல் ஒதைமீன் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM