(க.கிஷாந்தன்)
சிவனொளிபாதமலை காட்டுப்பகுதியில் மரை ஒன்றை வேட்டையாடி அதனை இறைச்சியாக்கி தன்வசம் 30 கிலோ இறைச்சியை வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் நேற்றிரவு மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தின் போட்மோர் பிரிவை சேர்ந்தவர்களாவர்.
இவர்களை பொலிஸ் விசாரணையின் பின் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை வேட்டையாடப்பட்ட மரை தொடர்பாக அதன் இறைச்சி பகுதிகளை கால்நடை சுகாதார பிரிவின் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை இது தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM