மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிசார் போராட்டகாரர்களின் பெயர்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
இன்று (15/03/2021) காலை மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிசார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் போராட்டத்தில் அமர்ந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பெயர்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு பொலிசார் பல்வேறு அச்சுறுத்தல்களை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஏற்கனவே உண்ணாவிரதப் பந்தலை இரவோடு இரவாக அகற்றிய பொலிசார், தற்போது நடு வெயிலில் அமர்ந்து போராடிவரும் தங்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM