(எம்.மனோசித்ரா)
கொழும்பு - தொட்டலங்க பிரதேசத்தில் ஹேனமுல்ல ஒழுங்கையில் அமைந்துள்ள கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீடீர் தீப்பரவலில் சுமார் 40 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இத் தீவிபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தினால் 40 வீடுகளிலுமுள்ள சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படாத அதேவேளை, யாரும் காயங்களுக்கும் உள்ளாகாமல் பொலிஸார் , இராணுவம் மற்றும் தீயணைப்பு பிரிவினரால் காப்பற்றப்பட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அத்தோடு தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கான உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்காக இராணுவத்தினர் , கடற்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வீடுகள் அனைத்தும் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தமையால் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு தீ மிக வேகமாகப் பரவியதாகவும் , அதனால் தமது உடைமைகள் எவற்றையும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM