மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள மாமாங்கம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மனித பாவனைக்குதவாத தேயிலை தூள்களை விற்பனை செய்த ஒருவரை நேற்று சனிக்கிழமை (13.03.2021)கைது செய்ததுடன், 600 கிலோ தேயிலைத் தூள்களையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாமாங்கம் பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிலீடுபட்டபோதே, அனுமதிப்பத்திரமின்றி சிலோன் தேயிலை என்ற பெயரில் மனித பாவனைக்குதவாத தேயிலை தூள்களை விற்பனை செய்து வந்த ஒருவரை கைது செய்ததுடன், அங்கிருந்து 600 கிலோ கிராம் தேயிலைத் தூள்களை மீட்டுள்ளனர்.
குறித்த தேயிலைத்தூளை எங்கிருந்து கொள்வனவு செய்யப்பட்டதென்பது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட தேயிலைத் தூளின் மாதிரி கொழும்புக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பவுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM