கவலையடையும் பொலிஸார் மக்களின் உதவியை நாடுகின்றனர் !

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 01:05 PM
image

(செ.தேன்மொழி)


நாட்டில் சில பிரதேசங்களில் வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன், எஞ்சிய 5 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில்  காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களாவர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் , பாதசாரிகள் நால்வர் உட்பட முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த ஐந்து பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீதி விபத்துக்களினால் கடந்த காலங்களில்  நாளொன்றுக்கு சுமார் 6 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது  நாளொன்றுக்கு 12 -15 பேர் விபத்துக்களால்  உயிரிழக்கின்றனர்.

இது கவலைக்கிடமான நிலைமையாகும். வீதி விபத்துகளினால் இடம்பெறும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸார்  பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் , மக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினாலே அதனை கட்டுப்படுத்த முடியும்.

எனவே வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் வீதி ஒழுங்க சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன் , எப்போதுமே கவனத்துடன் செயற்பட வேண்டும். தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதனால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி விபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கு வாகன சாரதிகள் முயற்சிக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25