காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பல அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள முத்து நகர் கிராம மக்கள்

Published By: Vishnu

14 Mar, 2021 | 11:54 AM
image

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கிராம வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் குறித்த பகுதியினுள் புகும் காட்டு யானைகள் தங்களது பயிர்செய்கைகளை துவம்சம் செய்து விட்டு செல்வதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வாழை, பலா, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாதுள்ளதாகவும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் அச்ச நிலை நிலவுவதாகவும் அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அத்துடன் கிராமத்தில் அமைக்கப்பட்ட யானை வேலிகள் உடைந்து சீரற்ற நிலையில் உள்ளதனால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அதேநேரம் பிரதான வீதியில் இருந்து உரிய கிராமத்துக்கு செல்லும் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் செல்லும் பாதையின் வீதி மின் விளக்கின்மை காரணமாகவும் இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய இக்கட்டான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50