பாலியல் தொழிலாளிகளாக யுவதிகளை ஓமான் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஓமானில் இருந்து வந்த இந்த பெண் குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர்.
வவுனியா பம்பைமடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் கிரிகொல்ல கிராந்துருகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆர்.எம். குசுமாவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்துள்ள இந்த பெண், யுவதிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி, ஓமான் சுல்தான்களுக்கு சிறு தொகை பணத்திற்கு பாலியல் தொழிலாளிகளாக விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM