(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்த தற்போதைய நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விரிவாக ஆராய்ந்தோம்.
இந்தப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.
அதன்படி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களையும், பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் உரிய நேரத்தில் தமது கடமைகளைச் செய்வதற்குத் தவறியவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் சுதந்திரமும் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம். அதனைச் செய்வதற்கான நீதிப்பொறிமுறை உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதுவிடயத்தில் மிகமுக்கியமான 22 ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.
அவை வெகுவிரைவில் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான விரைவானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான நீதிப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM