(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 86 000 ஐ தாண்டியுள்ளது.
இன்று புதன்கிழமை இரவு 9.30 மணி வரை 300 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 86 643 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 83 210 பேர் குணமடைந்துள்ளதோடு , 2782 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று செவ்வாய்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.
உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண்ணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 7 ஆம் திகதி உயர் இரத்த அழுத்தம், கொவிட் தொற்று மற்றும் தீவிர நீரிழிவு, தீவிர பக்கவாதம் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.
அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரகம் செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.
றாகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , புற்று நோய், தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM