மேற்கு முனைய அபிவிருத்தியில் இந்திய அரசின் பங்குப்பற்றல் இல்லை - அரசாங்கம் 

Published By: Digital Desk 4

10 Mar, 2021 | 06:13 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் அதானி நிறுவனத்தை பரிந்துரைத்ததன் காரணமாகவே மேற்கு முனைய அபிவிருத்தியில் அந்நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட தீர்மானித்தது. இதில் இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதல் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சம்பிக ரணவக்கவின் கைது பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு முரணானதல்ல - உதய  கம்மன்பில | Virakesari.lk

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது. இதன் போது மேற்கு முனைய விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை இணை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கிழக்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனமாக அதானி நிறுவனம் காணப்பட்டது.

எனினும் பின்னர் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையினூடாக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்ததோடு , மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானித்தது.

இதே வேளை கிழக்கு முனைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடனேயே மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய அபிவிருத்திக்கான இடம் மாற்றப்பட்டுள்ளதே தவிர முதலீட்டு நிறுவனம் மாற்றப்படவில்லை.

இந்நிலையிலேயே மேற்கு முனைய அபிவிருத்தியில் எமது பங்குபற்றல் இல்லை இந்திய அரசாங்கம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எனவே தான் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது.

மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருதரப்புக்களினாலும் அறிவிக்கப்பட்ட இரு நிலைப்பாடுகளும் சரியானவையாகும். மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தினால் எந்தவொரு முதலீட்டு நிறுவனமும் பரிந்துரைக்கப்படவில்லை.

அதற்கமையவே இந்தியாவின் அறிவிப்பு சரியெனக் கூறுகின்றோம். இதே வேளை கடந்த வார ஊடகவியலாளர் மாநாட்டில் , ' இந்தியாவினால் கிழக்கு முனைய அபிவிருத்திக்காக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடனேயே இலங்கை இணைந்து செயற்படுகிறது.' என்று அமைச்சரவை பேச்சாளர் கூறிய விடயமும் சரியானதாகும்.

அதற்கமையவே முதலீட்டு நிறுவனத்தில் மாற்றமின்றி மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தது. இதனையே இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதாக அறிவித்தோம். எனினும் ஜப்பான் இதுவரையில் எவ்வித முதலீட்டாளர்களையும் பரிந்துரைக்கவில்லை.

கிழக்கு முனையம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் , அதனை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அவ்வாறான எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை. சிலர் மாத்திரமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் பெருமளனவானோர் மேற்கு முனைய அபிவிருத்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே வேளை கிழக்கு முனையத்தை வெளிநாட்டு கடன் பெற்று அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக , தேசிய வங்கிகளிடமிருந்து கடன் பெற்று துறைமுக அதிகாரசபையினூடாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55