(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கொவிட் -19 வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5019 வரை அதிகரித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த கொவிட்-19 வைரஸ் கொத்தணி காரணமான இதுவரையில் 5019 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 4789 பேர் குணமடைந்துள்ளதுடன், 217 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் 30 ஆயிரத்து 744 பேர் அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசொதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரதேச வைத்திய பிரிவினரின் உதவியுமடன் 5153 கைதிகளுக்காக கொவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் கொவிட் தடுப்பூசிகளை கைதிகளுக்கு பெற்றுள் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இதன்போது வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 11 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM