வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் அரசாங்கம் நெருக்கடி: மக்கள் பாதிக்கப்படும் அவலம் - எதிர்க்கட்சி சாடல்

Published By: J.G.Stephan

08 Mar, 2021 | 05:48 PM
image

(எம்.மனோசித்ரா)
வெளிநாட்டு கடனை மீள செலுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறிக்கொண்டிருப்பதால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். எனவே கடனை மீள செலுத்துவதற்கான மாற்று திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கியினால் வாராந்தம் வெளியிடப்படுகின்ற அறிக்கையின் படி இலங்கையின் அந்நிய செலாவணி இருப்புக்கள் மேலும் வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி இறுதியாகும் போது அந்நிய செலாவணி இருப்புக்கள் 4557.7 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று அந்நிய செலாவணி 4097.3 மில்லியன் (4 பில்லியன்) டொலர்கள் மாத்திரமே காணப்படுகிறது. 381 மில்லியன் பெறுமதியான தங்கம் காணப்படுகிறது.

இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். மாதாந்த இறக்குமதியிலேயே அந்நிய செலாவணி இருப்பு தங்கியுள்ளது. 2020 முதல் வாகனங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டு இறக்குமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மாதாந்தம் சுமார் ஒன்றரை பில்லியன் டொலர் இறக்குமதி வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பிணைமுறி மற்றும் இலங்கை அபிவிருத்தி பிணைமுறி 3467.2 மில்லியன் அமெரிக்க டொலர் மீள செலுத்த வேண்டியுள்ளது. 215.1 மில்லியன் டொலர்கள் இந்த மாதத்தில் மாத்திரம் செலுத்த வேண்டியுள்ளது. இவை தவிர உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா , இந்தியா உள்ளிட்டவற்றிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களையும் மீள செலுத்த வேண்டியுள்ளது.

நான் ஏற்கனவே கூறியதைப் போன்று அந்திய செலாவணி இருப்புக்கள் வீழ்ச்சியடையும் போது , கடன்களை மீள செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்கள் ஊடான வருமானம், சுற்றுலாத்துறை என்பவற்றின் மூலம் அந்நிய செலாவணி கிடைப்பது ஒருபுறம். மறுபுறம் இறக்குமதிக்கு செலவு, வட்டி மீள் செலுத்தல் உள்ளிட்ட செலவீனங்களும் உள்ளன. 2019 டிசம்பர் மாதத்தில் 100 பில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடு காணப்பட்டது. எனினும் தற்போது 90 வீதம் வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு சர்வதேச சந்தையில் கடன் பெறப்படும். இதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 14 பில்லியன் டொலர்  கடன்  உள்ளது. அதனையே தற்போது செலுத்திக் கொண்டிருக்கின்றோம். 2020 இல் ஒரு பில்லியன் மீள செலுத்தப்பட்டது. இது மஹிந்த ராஜபக்ஷ 2010 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த போது பெறப்பட்ட கடனாகும். இவ்வருடம் ஜூன் மாதம் மீண்டுமொரு பில்லியன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எனினும் தற்போது சர்வதேச சந்தையிலும் எம்மால் கடன் பெற முடியாது.

இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகை முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். எனவே வெளிநாட்டு கடன் பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதை விடுத்து, கடனை மீள செலுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதால் நாட்டுக்கு மக்களே பாதிக்கப்படுவர். எனவே கடனை மீள செலுத்த மாற்று திட்டங்களை ஆராய வேண்டும். அவ்வாறு செய்தால் இதற்காக தற்காலிக தீர்வையேனும் அராங்கத்தால் பெற்றுக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04