'சவால்மிக்க உலகில் பெண்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்': பிரதமர்

Published By: J.G.Stephan

07 Mar, 2021 | 03:42 PM
image

சுபீட்சமான கொள்கை திட்டத்துக்கமைய பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு என்பவை வன்மையான கண்டிக்கத்தக்கது. அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சவால்மிக்க உலகில் பெண்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். வெற்றி தோல்வி கிட்டுவதும் நன்மை தீமை விளைவதும் உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் செயற்பாட்டின் அடிப்படையிலாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச  மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகில் பெண்களின் உரிமைக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பது  எனது நிலைப்பாடாகும். ஒரு பெண் என்பவள் மகளாக, மனைவியாக, உலகின் உன்னத பதவியான தாயாக என்ற அனைத்து நிலைகளிலும் நிறைந்துள்ளாள். ஆகவே பெண்களுக்கு சமூகத்தில்  உரிய அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.

பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், அவர்களை தைரியமானவர்களாக பலப்படுத்த எப்போதும் கவனம் செலுத்துவோம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாகுபாடும் வண்மையாக கண்டிக்கத்தக்கது.பெண்களின் உயர்வின் மூலம் சமூக நலனுக்கான வாய்ப்புக்களை நாம் ஒரு நாடு என்ற ரீதியில் அனுபித்து வருகிறோம்.

வரலாற்றில் விஹாரமாதேவி முதல் நவீன உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க  அவர்களின் மூலமாகவும் இலங்கை  பெண்களின் வீரத்தையும், தலைமைத்துவ ஆளுமையினையும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இச்செல்வாக்குக்கமைய இந்நாட்டு பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். அத்துடன் தாய் நாட்டில் முக்கிய பல பொறுப்புக்களில் பெண்கள் உள்ளமையும்  பெருமைக்குரிய விடயமாகும்.

பொருளாதார ரீதியாகவும், சமூக அரசியல் ரீதியாகவும்,பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். சமுதாயத்தின் மிகச்சிறிய அலகான குடும்பத்தை பாதுகாக்க போராடும் பெண் இறுதியில் முழு நாட்டையும் பாதுகாக்க பங்களிப்பு செய்கிறார்.

பெண்கள் பல்வேறு காரணிகளை கொண்டு இன்று வரை பல சவால்களை எதிர்க் கொள்கிறார்கள். சவால் மிக்க இவ்வுலகில் பெண்கள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.வெற்றி அல்லது தோல்வி கிட்டுவதும், நன்மை தீமை விளைவதும்  உங்களின் சொந்த எண்ணங்கள் மற்றும் செயற்பாட்டின் அடிப்படையிலாகும்.

ஆகவே சவாலை தெரிவு செய்யுமாறு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். உங்களது சமூகத்தின் பங்களிப்பின் அடிப்படையில்  கட்டியெழுப்பப்படும் நாட்டின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்தியடைந்த உலகை நோக்கி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நினைவுப்படுத்துகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43