அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் - ஐ.தே.க. 

Published By: Digital Desk 4

04 Mar, 2021 | 06:51 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மனித உரிமை மீறல்தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கம் பன்கீ மூனுடன் செய்துகொண்ட கூட்டு பிரகடனத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தப்பிச்செல்ல முடியாது.

அதனால் நாடு என்றவகையில் இதற்கு முகம்கொடுத்து, மனித உரிமை மீறல் இடம்பெறவில்லை என்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளத்தயார் என ராஜபக்ஷ் அரசாங்கமே ஆரம்பமாக கூட்டு பிரகடம் ஒன்றை வெளியிட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் பான் கீமூனுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே எமது அரசாங்கம் 2015இல் மனித உரிமை மீறல்தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவ்வாறு இல்லாமல் எமது நாட்டில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தானாக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு, அதிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. 

இந்த விடயம்தொடர்பாக முகம்கொடுத்து தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்து இந்த பிரச்சினை எங்களுக்கு வந்துகொண்டிருக்கும். எமது நாட்டில் மனித உரிமை மீறப்படவில்லை. அதனால் தான் நாங்கள் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளோம். 

அத்துடன் இராணுவத்தினரால் அல்லது அதிகாரிகளால் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அந்த தவறை சரிசெய்யவேண்டும். அதுதான் இடம்பெறவேண்டியது.

அந்த தவறை செய்வது ராணுவத்தினராகவோ அரசாங்கமாகவோ அல்ல. மாறாக தனி நபர்களால் ஏற்பட்ட தவறுகளாகவே நாங்கள் அதனை கண்டுவந்தோம்.

இராணுவ அதிகாரியோ அல்லது அரச அதிகாரியோ தவறு செய்திருந்தால் அந்த குற்றம் சுமத்தப்படுவது அந்த நபருக்காகும். அவ்வாறில்லாமல் ஒட்டுமொத்தமாக அந்த துறைக்கு அல்ல. ஆனால் இதனை இனவாதமாக சித்தரித்து, ராணுவத்துக்கு அல்லது பொலிஸாருக்கு எதிராக மேற்கொள்வதாக பிரசாரம் மேற்கொண்டு பிழையான தீர்மானத்துக்கு வந்தோம். 

எனவே இந்த தவறான தீர்மானத்தை சரிசெய்யவேண்டிய பொறுப்பு, ஆரம்பமாக இருப்பது ராஜபக்ஷ அரசாங்கத்துக்காகும். அதனால் நாடு என்றவகையில் மனித உரிமை பேரவைக்குக்கு நாங்கள் முகம்கொடுக்கவேண்டும்.

அதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாத்த நாடு என்பதை ஒப்புவிக்கவேண்டும். அதனை எங்களால் ஒப்புவிக்க முடியும். அவ்வாறு இல்லாமல் மனித உரிமை பேரவையின் பிரேரணைகளில் இருந்து நாங்கள் தப்பிச்செல்வதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01