மேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது

Published By: Digital Desk 4

03 Mar, 2021 | 09:28 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 484 ஆக உயர்வடைந்துள்ளதோடு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இன்று புதன்கிழமை இரவு 9.30  மணி வரை 305 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 84 205  ஆக அதிகரித்தது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 80 437 பேர் குணமடைந்துள்ளதோடு , 3155 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று செவ்வாய்கிழமை மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்ததுடன் இன்றையதினம் ஒரு கொரோனா மரணம் பதிவாகியிருந்த்து. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதுடைய பெண்னொருவர் கடந்த  முதலாம் திகதி கொவிட் நிமோனியா, தீவிர நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 5 ஐ சேர்ந்த 89 வயதுடைய பெண்னொருவர் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியா, தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா , நீரழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியா , சுவாசத்தொகுதி செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பிலிமதலாவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண்னொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி தீவிர கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04