வெறுக்கத்தக்க வகையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்  சிலரின் பேச்சு - பொதுஜன பெரமுன

Published By: Gayathri

02 Mar, 2021 | 02:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுவதாக  அக்கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர் குறிப்பிடுவது அடிப்படை தன்மையற்றது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கையை கொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் பேச்சுக்கள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.  

கூட்டணியின் சகோதர கட்சி என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்புடன் இவர்கள் செயற்படவேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அறிக்கையைகொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிள் கருத்துக்கள் வெறுப்பூட்டும்  தன்மையில் காணப்படுகிறது.

கூட்டணியின்  சகோதர கட்சி என்ற அடிப்படையில் அனைத்து சகோதர கட்சிகளும் கூட்டு பொறுப்புடன் செயற்படவேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படை தன்மையற்றது. கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைவருக்கும் உரிய அந்தஸ்த்து தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் அறிக்கை சுயாதீனமற்றது என ஆணைக்குழுவை ஸ்தாபித்தவர்கள் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. 

ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் அரசியல் அழுத்தங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட முடியும். சுதந்திர கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது சிறந்ததாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08