உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள்,பேராயரிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 10:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடமும் , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப்பணிப்பாளர் ஜெனரல் ஹரிகுப்த றோஹனதீரவினால் இன்று திங்கட்கிழமை மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடமும் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் அறிக்கை பிரதிகள் கையளிக்கப்பட்டன. 

அதனையடுத்து இன்றைய தினம் மாலை கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் அறிக்கை கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழுவினால் 2019 டிசம்பர் 20 ஆம் திகதி முதலாவது இடைக்கால அறிக்கையும் , 2020 மார்ச் 2 ஆம் திகதி இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இவ்வாண்டு பெப்ரவரி முதலாம் திகதி முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் 6 பேர் அடங்கிய குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி வெவ்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை இதனை நிராகரித்துள்ள அதே வேளை ஆளுந்தரப்பின் பங்காளி கட்சியான சுதந்திர கட்சியும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15