ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இதுவரை நடத்திய இரத்தக்களரி ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த ஒடுக்குமுறை காரணமாக மியான்மர் முழுவதும் பல நகரங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. தலைவர் அன்டோனியோ குடரெஸ் ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச கண்டனத்திற்கு தலைமை தாங்கினார்.
ஆங் சான் சூகி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த சுமார் 1,000 எதிர்ப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
"அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆபத்தான சக்தியைப் பயன்படுத்துவது மற்றும் தன்னிச்சையாக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மியான்மர் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து இராணுவத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர தலைவர் ஜோசப் பொரெல் ஒரு அறிக்கையில் "இந்த நிலைமைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்" என்று கூறியுள்ளதுடன், "இராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு எதிரான சக்தியைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மேலும் மக்கள் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டசபைக்கான உரிமையை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.
ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக மியான்மரின் இராணுவத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குறித்து ஐரோப்பிய அமைச்சர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளனர் மற்றும் மியன்மாருக்கான சில அபிவிருத்தி உதவிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த தடைகள் எதிர்வரும் நாட்களில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஐரோப்பிய ஒன்றியத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும் நடைமுறைக்கு வரும்.
கடந்த வார இறுதியில் காவல்படையினர் நடத்திய தாக்குதலில் எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பெப்ரவரி 1 மியான்மரில் நடந்த இராணுவ சதித்திட்டத்தில் ஈடுபட்ட இரண்டு தளபதிகளுக்கு எதிராக அமெரிக்கா திங்களன்று புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
அது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், "நாங்கள் பர்மாவின் தைரியமான மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், அனைத்து நாடுகளும் தங்கள் விருப்பத்திற்கு ஆதரவாக ஒரே குரலில் பேச ஊக்குவிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் "வன்முறை நிறுத்தப்பட வேண்டும், ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
அதேநேரம் அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து பணியாற்றும் இங்கிலாந்து, சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்காக தளபதி உட்பட ஒன்பது மியான்மர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை தடைகளை விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
"ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மியான்மரில் ஸ்திரத்தன்மை மோசமடைந்து வருவதை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்கிறோம்" என்று துருக்கி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் "நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கும் தாமதமின்றி ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்றும் மேலும் கூறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM