பெப்ரவரி 1 இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான பல வார கால ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் மியான்மர் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸாரும், இராணுவத்தினரும் முன்னெடுத்த முயற்சியின்போது பலர் காயமடைந்துள்ளதாகவும் மியன்மார் அரசியல்வாதியொருவரும், அந் நாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
அதன்படி டேவி நகரில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூடு ஒருவரைக் கொன்றது மற்றும் பலரை காயப்படுத்தியது என்று அரசியல்வாதி க்யாவ் மின் ஹ்டிகே ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம் டேவி வோட்ச் செய்தி ஊடகமும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நிறுவனம் மியன்மாரின் காவல்துறை மற்றும் ஆளும் இராணுவ சபையின் செய்தித் தொடர்பாளருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் கிடைக்கவில்லை.
இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெரும்பாலானோர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மார் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் மியான்மரின் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறிய சதி, நூறாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை வீதிகளில் கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து கண்டனத்தை ஈர்த்தது, சில வரையறுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தது.
ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனில், பலருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் எவ்வாறு காயமடைந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காவல்துறையினர் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர் மற்றும் இறப்பர் தோட்டக்கள் அடங்கி துப்பாக்கி பிரயோகத்தையும் முன்னெடுத்துள்ளதாக சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை இராணுவ சதித்திட்டத்தைத் தடுக்க "தேவையான எந்த வழியையும்" பயன்படுத்துமாறு ஐ.நா.வை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து, மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாட்டின் தூதர் 'கியாவ் மோ துன்' பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM