( செ.தேன்மொழி )
21 553 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொவிட் - 19 தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் , இதுவரையில் 21 ஆயிரத்து 553 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று மாத்திரம் 3565 உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன.
தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதுடன் , பொலிஸ் வைத்தியசாலையிலிருப்பவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தன.
கொவிட் - 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொலிஸார் பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வைரஸ் தொற்றுகாரணமாக பொலிஸாரும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனை தடுக்கும் வகையிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM