( இராஜதுரை ஹஷான் )
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து அராங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தோல்வியடைந்துள்ளது.
உண்மை காரணிகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
இதனை பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு இழைக்கும் அநீதியாகவே கருத வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சு வார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பினை கொண்டுடிருந்தார்கள்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாமல் போனவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராயவே விசாரணை ஆணைக்குழு முழு காலத்தையும் செலவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு ,தேசிய புலனாய்வு பிரிவினரது பலவீனம், தாக்குதல் சம்பவத்துக்கு சாதகமாக அமைந்தது என்பதை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற மறுகணமே நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டார்கள்.
தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானின் பின்னணியில் இருந்தவர்கள் யார், என்பதையே கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எதிர்பார்த்தார்கள்.
பொதுஜன பெரமுன ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் பிரதான தேர்தல் பிரசாரமாக பயன்படுத்தி வெற்றியடைந்தார்கள்.
ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் உண்மையான குற்றவாளியை பகிரங்கப்படுத்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள. ஆனால் தற்போது ஏனைய வாக்குறுதிகளைப் போன்று ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரமும் பொய்யாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்தை அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM