(செ.தேன்மொழி)
பேலியகொட பொலிஸாரால் சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்தின் வட பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
குறித்த மாணவன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் பொலிஸ் விசேட விசாரணை பிரிவை விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வாறு பணி நித்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM