திருகோணமலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது

Published By: Vishnu

26 Feb, 2021 | 05:11 PM
image

பெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருகேணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கடந்த 8 ஆம் திகதி , 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திருக்கோணமலை - கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகொன்றில் வந்துள்ள கொள்ளையர்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் தற்சமயம் இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இந்த கொள்ளைத்திட்டத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புக் கொண்டு தற்போது தலைமறைவாகியுள்ள 'ஐஸ் மஞ்சு' எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ள பொலிஸார் , அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் , வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் அதன் ஆறு தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை , சந்தேக நபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார் , சந்தேகநபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் , கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளை மீட்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13