ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை அரசியல்  கட்சியொன்றின் கொள்கை பிரகடனமாகியுள்ளது - ரணில்

Published By: Digital Desk 3

26 Feb, 2021 | 10:44 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

2019 ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான எவ்வித உண்மையான விடயங்களையும் குறிப்பிடாது வெறுமனே ஒரு நாடு , ஒரு சட்டம் என்ற பரிந்துரைகளை முன்வைத்து அரசியல் கட்சியொன்றின் கொள்கை பிரகடனமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை அமைந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று முழு பாதுகாப்பு கட்டமைப்பையும் நெறிப்படுத்தி அடுத்த தாக்குதலொன்று இடம்பெறாதவாறு முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படவில்லை. இது ஒரு பெரும் குறைபாடாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – 03 ஐந்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள ஐ.தே.க.வின் தலைவரின் இல்லத்தில் கட்சி உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் குறிப்பிடுகையில் ,

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதனால் அரசியலமைப்பில் காணப்படுகின்ற சிறப்புரிமைகளை இரத்து செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைப்பது போன்று இன ரீதியாக காணிகளை பிரிப்பதென்பது சாத்தியப்படக் கூடிய விடயமா? இதேபோன்று மறைக்கல்வி நிலையங்களை கண்காணிப்பதற்கான யோசனையின் நோக்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் பதவியை இரத்து செய்வதற்காகவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்று 2019 ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்புசபை கூட்டம் குறித்து எவ்வித விடயங்களும் அறிக்கையில் காணப்படவில்லை. அனைத்து இராணுவ அதிகாரிகள் , புலனாய்வு திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு  தொடர்பான உயர் நிலை அதிகாரிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் வெளிப்படுத்தாத விடயங்கள் பின்னர் பேசப்பட்டிருக்கலாம் என சிந்திக்க முடியாது.

ஆகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை புதிய விடயங்கள் எதனையும் குறிப்பிடவில்லை. மாறாக ஒரு அரசியல் கட்சியின் கொள்கை பிரகடனமாகவே காணப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தால் முஸ்லிம் அமைச்சர்களை அழைத்து எவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என எமக்கு அறிவித்திருக்க முடியும்.

அதே போன்று அந்த சந்தர்ப்பத்தில் தாக்குதல் தொடர்பான தகவலை யார் அறிந்திருந்தார்கள் என்பதையும் அறிந்திருக்க முடியும். முதலாவது தாக்குதல் இடம்பெற்று குறுகிய நேரத்துக்குள் பிரதமர் என்ற வகையில் நான் பல வந்தமாக பாதுகாப்பு அமைச்சிற்கு சென்று அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் அழைத்து அடுத்த தாக்குதல் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58