2,606 கிலோ கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்கள் கைது

Published By: J.G.Stephan

25 Feb, 2021 | 01:34 PM
image

(எம்.மனோசித்ரா)
விஷேட அதிரடிப்படையினரால் யக்கலமுல்ல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை 2,606 கிலோ கழிவு தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கழிவு தேயிலையுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிருவரும் யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தேயிலையை பரிசோதிப்பதற்காக 11 மாதிரிகளை  இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர். இவை இராசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

'சிலோன் டி' என்ற பெயர் உலகலாவிய ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் சந்தைப் பொருளாகும். எவ்வாறிருப்பினும் இவ்வாறு கழிவு தேயிலை தூள் தயாரித்தல் , ஏற்றுமதி செய்தல் என்பன இந்த நற்பெயரை இல்லாமலாக்குவதற்கு முன்னெடுக்கப்படும்  முயற்சியாகும். அத்தோடு இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய செயலுமாகும். எனவே பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை என்பன கழிவு தேயிலை தூள் தொடர்பான கண்காணிப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13