(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடமையில் ஈடுபடும அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காரியாலய பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதன் தேவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் 4,513 பரீ்ட்சை மத்திய நிலையங்களில் மார்ச் முதலாம் திகதி கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பாக இருக்கின்றது. இதற்காக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை மண்டப உதவியாளர்கள் என சுமார் 46 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபட இருக்கின்றனர். கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சை கடமையில் ஈடுபடும் இவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சர் உட்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாட்டில் நாளாந்தம் கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், சுமார் 6 இலட்சம் மாணவர்கள் தோற்றும் இந்த பரீட்சையில் அவர்களில் பாதுகாப்பு தொடர்பாக கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கொவிட் தொற்று நிலைமையில் தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் தேவை தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்திவருகின்றோம். தற்போதைய நிலைமையில் முன்னுரிமை மற்றும் விரைவான வேலைத்திட்டமாக , எதிர்வரும் தினங்களுக்குளாவது பரீட்சை கடமைகளில் ஈடுபட இருக்கும் அதிபர் ,ஆசிரியர்கள் உட்பட பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM