துப்பாக்கிச் சூட்டில் நிறைவடைந்த கைகலப்பு - பசறையில் சம்பவம்

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:48 AM
image

பசறைப் பகுதியைச் சேர்ந்த கொஸ்கொல்லை என்ற பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையொன்று, துப்பாக்கிப் பிரயோகத்தில் முற்றுப்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்று 22-02-2021 இரவு 7.30 மணியளவில், இடம்பெற்றது. 

இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் குறி தவறி வெடித்ததினால் எவருக்கும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தையடுத்து, அங்கு கூடிய மக்கள், துப்பாக்கிப் பிரயோகம் செய்த சனத் பண்டார என்ற 42 வயதுடைய நபரை மடக்கிப் பிடித்தனர். 

இதையடுத்து குறித்த துப்பாக்கிப் பிரயோகம் குறித்து, பசறைப் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் விரைந்து சனத் பண்டாரவை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்திய உள்ளுர்த் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிசார் மீட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை, பசறை சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பசறை – கொஸ்கொல்லையைச் சேர்ந்த சனத் பண்டாரவிற்கும், பி.எம். ஜயசந்தர என்பவருக்குமிடையே நீர்ப்பிரச்சினையே, மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமென்று, பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 16:58:42
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00