கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலியின் தூதரும், இத்தாலிய பொலிஸ் அதிகாரியொருவரும், அவர்களது சாரதியைும் கொங்கோவின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.
தூதர் லூகா அட்டனசியோ திங்களன்று கோமா நகரில் இருந்து ருத்ஷூருவில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ் பாடசாலை உணவுத் திட்டத்தைப் பார்வையிடப் பயணித்தபோது இந்த தாக்குதல் (துப்பாக்கி பிரயோகம்) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால் தூதுக்குழுவுடன் பயணித்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொங்கோ நேரப்படி காலை 10:15 மணியளவில் (08:15 GMT) நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை.
இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ, இந்த தாக்குதல் தொடர்பாக தனது “மிகுந்த வருத்தத்தையும் மிகுந்த துக்கத்தையும்” வெளிப்படுத்தியதோடு, பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் தனது சந்திப்பை விட்டுவிட்டு ரோம் நகருக்கு விரைவாக திரும்பினார்.
ருவாண்டா மற்றும் உகாண்டாவுடன் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் அமைந்துள்ள விருங்காவிலும் அதைச் சுற்றியும் பல ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன.
கடந்த வாரம் வடக்கு மற்றும் தெற்கு கிவு மற்றும் இட்டூரி மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயக குடியரசில் பணியாற்றும் போது கொல்லப்பட்ட இரண்டாவது ஐரோப்பிய தூதர் அட்டனசியோ ஆவார்.
1993 ஜனவரி இல், கின்ஷாசாவில் நடந்த கலவரத்தின்போது பிரெஞ்சு தூதர் பிலிப் பெர்னார்ட் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM