இன்று வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்  : முஸ்லிம் தலைவர்களை சந்திக்க கோரிக்கை : கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு

23 Feb, 2021 | 06:55 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர். 

இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் , நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரு நாட்கள்; உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று செவ்வாய்கிழமை மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

இதேவேளை நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைவிற்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

அதன் பின்னர் முற்பகல் 11.30 க்கு ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ள வணிக மற்றும் முதலீட்டு சம்மேளனத்திலும் பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

நண்பகல் 12.30 க்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் கலந்து கொள்வார். மேலும் நாவல கிரிமண்டல மாவத்தையில் உயர்தரத்திலான விளையாட்டு துறைசார் மத்திய நிலையமொன்றை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39