Published by T. Saranya on 2021-02-20 21:06:06
இன்று சனிக்கிழமை 528 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79,480 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 73,456 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5,589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 433 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.