(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்காக நீதி நிலைநாட்டப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் பிரதான கட்சியால் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் 12 பங்காளி கட்சிகள் உள்ளன. ஆனால் பிரதான கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றமையும் தொடர்புகளைப் பேணுகின்றமை என்பன மிக பலவீனமாகவே காணப்படுகிறது. உள்ளக தொடர்புகள் முழுமையாக அற்றுப் போயுள்ளன.
தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக தேசிய சொத்துக்கள் விற்கப்பட மாட்டாது என்று கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதே போன்று ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது.
நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் போது , அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்பட்டு தகுதிகளினடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது உறவினர்கள், நண்பர்களுக்கே முக்கிய நியமனங்கள் வழங்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அவை மாத்திமின்றி பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதையும் காண்கின்றோம். இடங்கள் பல கொள்ளையடிக்கப்படுகின்றன. சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் பங்காளி கட்சிகளுக்கான நீதி , நியாயம் நிலைநாட்டப்படவில்லை. குறைபாடுகளை கண்டறிந்து அவ்வப்போது தீர்வகளை வழங்காவிட்டால் நிலைமை மோசமடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM