மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்உட்கார்ந்திருப்பதின் அருமை. அவர்கள் தங்களால் சிறிது நேரம் உட்கார முடியாதா..! என்ற ஏக்கம் கூடுதலாக இருப்பவர்கள் ஏராளமானவர்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல செய்தியொன்று வெளியாகியிருக்கிறது.
மூலநோயால்பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அத்துடன் இடுப்பின் இறுதிப்பகுதியும், தொடையின் மேல் பகுதியும் ஒன்றிணையும் இடத்தில்அசௌகரியமான அரிப்பால் தவிப்பவர்கள் ஆகியோர்களுக்கு பிட்ட குளியல் அல்லது இடுப்பு குளியல் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
எம்முடைய குளியலறையில் பாத்டேப்பில் அமர்ந்து குளிக்கும் வசதி ஒரு சிலரிடம் இருக்கும். அதேபோன்றதொரு பாத்டேப்பில் வலி நிவாரண மருத்துவர்கள் இதற்கென பரிந்துரைக்கும் பிரத்யேக மருந்துகளைப் பயன்படுத்தி இவ்வகையிலான குளியலை குளித்தால் இதன் பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
இந்த பாத்டேப்பில் சற்று சூடு பொறுக்கக்கூடிய அளவிலான தண்ணீரை முதலில் ஊற்றவேண்டும். அதன் பிறகு வலி நிவாரண மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் ஒரிரு துளிகள் அதனுடன் கலக்கவேண்டும். பின் பிட்டப்பகுதி மற்றும் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இடுப்பு பகுதி வரையில் தண்ணீரில் அமர்ந்திருக்கவேண்டும். இப்படி பாத்டேப்பில் அமர்ந்திருக்கும் போது, இந்த குளியலால் ஆசன வாயின் பகுதியிலுள்ள இறுக்கமடைந்த நரம்புகள் மற்றும் தசைகள் இளகி நிவாரணத்தைத் தருகின்றன. இத்தகைய குளியலை வலி நிவாரண மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவேண்டும் என்பது தான் இதன் முக்கியமான அம்சம் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றும், அவசியம் ஏற்பட்டால் மூன்று தினங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் S. பிரேம் ஆனந்த், M.D.,
வலி நிவாரண மருத்துவ நிபுணர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM