ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றும் முயற்சி - எதிர்க்கட்சி

Published By: Digital Desk 3

19 Feb, 2021 | 09:03 AM
image

(செ.தேன்மொழி)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

நீதிமன்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுப்படுத்த வேண்டியது எதிர்கட்சியின் கடமையாகும். 

இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு , ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதுத் தொடர்பில் சபாநாயகரிடம் நாம் வினவினால் , அதற்கு அவர் தனக்கு இன்னமும் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவித்து வருகின்றார்.

ஆனால் விசாரணை அறிக்கையிலே , பொறுப்புதாரிகளாக எதிர்தரப்பு அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் , அவர்களை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,  நீதிமன்றத்தினால் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் , அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவொன்று ஆராய்ந்து பார்ப்பது நியாயமானதா? என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று எண்ணுகின்றேன்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது , குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் காண்பிக்கும் முயற்சியோ இதுவென்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  எனினும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நாம் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38