பெண்களுக்கு எதிரான முறைகேடுகளை விசாரிக்க பாராளுமன்றக் குழுவை நியமிக்கவும் - சுதர்ஷினி வேண்டுகோள்

Published By: Digital Desk 4

18 Feb, 2021 | 10:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

Image result for பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

சபாநாயகரின் அனுமதியுடன் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி இந்த பாராளுமன்ற குழுவை அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு வன்முறைகள், பாகுபாடுகள்  மற்றும் ஏதாவதொரு பதவியில் தமது திறமை, தகுதி மற்றும் இயலுமைக்கு அமைய பதவி உயர்வு பெறும் போது பெண் என்ற  காரணத்தினால் இடம்பெறும் முறைக்கேடுகளை விசாரணை செய்யக்கூடிய முழு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற குழு அவசியமாகும். 

பெண்களுக்கு உரிய இடம், சமநிலை, தாய்க்கு முதலிடம் போன்ற வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும், சமூகத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு பாகுபாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான நிலையில் இந்த பாராளுமன்ற குழுவின் ஊடாக பெண்களின் திறமை, இயலுமை மற்றும் தகுதி அடிப்படையில் முன்னேறிச் செல்ல உள்ள தடைகளை தவிர்க்க முடியும் என்றார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜேரத்ன, கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25