இணையத்தளத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம் கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்களே இந்த மோசடிக்குள் சிக்குண்டுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் மிகவும் சூட்சகமாக நுழையும் கொள்ளையர்கள், அவர்களின் வங்கி கணக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணங்களை வைப்பிலிட்டு கொள்வதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பணம் கொள்ளை மோசடி தொடர்பில் இவ் வருடத்தில் இதுவரையில் 10 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM