இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்கா குணதிலக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் முன்னதாக தோல்வியுற்ற 2 கிலோ மீற்றர் தூர உடற்பயிற்சி சோதனை சவாலை நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பயிற்சியைத் தொடங்கவிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சுகததாச மைதானத்தில் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கிராண்ட் லுடென் நடத்திய 2 கிலோ மீற்றர் தூர உடற்பயிற்சி சோதனையில் பங்கெடுத்தனர்.
இதன்போது பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க மற்றும் தில்றூவான் பெரேரா ஆகியோர் தோல்வியடைந்தனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில் பங்கெடுத்த தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் வெற்றிகரமாக சோதனையை நிறைவுசெய்துள்ளனர்.
தனுஷ்கா குணதிலக்க 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடங்கள் 23 வினாடிகளுக்குள் நிறைவுசெய்தார். அதேபோன்று பானுகா ராஜபக்ஷ 8 நிமிடம் 27 வினாடிகளில் இலக்கினை நிறைவுசெய்தார்.
திருமணத்தின் காரணமாக கடந்த வார சோதனையில் பங்கேற்க முடியாத குசால் மெண்டிஸும் நேற்று தனது உடற்பயிற்சி பரிசோதனையை 8 நிமிடம் 18 வினாடிகளில் நிறைவுசெய்தார்.
புதிய சோதனையின்படி, வீரர்களுக்கு 2 கிலோமீட்டர் ஓட்ட தூரத்தை 8 நிமிடங்கள் 35 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். உடற் சோதயைில் ஒரு வீரர் தோல்வியுற்றால், அவர் 40 நாட்களுக்குள் மற்றொரு சோதனை செய்ய முடியும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM