இந்திய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் காலி - வலஹந்துவ தோட்டத்தில் நாட்டல் 

Published By: Digital Desk 4

15 Feb, 2021 | 09:36 PM
image

(நா.தனுஜா)

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப்பகுதியில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய திட்டம் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் காலி வலஹந்துவ தோட்டத்தில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (இணையவழி ஊடாக), தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது விசேட காணொளி ஒன்றினூடாக உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உரையாற்றினார்.

மிகவும் சவால்மிக்க தற்போதைய சூழ்நிலையில், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இதன்போது குறிப்பிட்ட கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்தினால் முன்னுரிமை அளிக்கப்பட்டுவரும் நீர்வழங்கல், திறன் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளடங்கலான அனைத்து சமூக - பொருளாதார துறைகளினதும் அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்டப்பகுதியில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக இவ்வருடம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காலி வலஹந்துவ வீட்டுத்திட்டமானது, ஏற்கனவே 270 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டில் இலங்கையில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வகையிலான இந்திய வீடமைப்புத்திட்டத்தின் ஓரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49