தென்னாபிரிக்காவுக்கு எதிராக லாகூரின், கடாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று டி-20 தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அது மாத்திரமன்றி இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் 100 வெற்றிகளை பதிவுசெய்த முதல் அணி என்ற சாதனையையும் பெற்றது.
அதன்படி பாகிஸ்தான் அணி 164 போட்டிகளில் (டி-20) வியைாடி 100 வெற்றிகளை பதிவுசெய்து முதல் இடத்திலும், இந்தியா 137 போட்டிகளில் (டி-20) விளையாடி 85 வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது.
அதேநேரம் டி-20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள 63 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா 65.03 என்ற சிறந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது பாகிஸ்தான் அணியுடன் இரு டெஸ்ட் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான டி-20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 03 ஓட்டங்களினாலும், நேற்று முன்தினம் நடைபெற்ற டி-20 தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்றிருந்தது.
இந் நிலையில் தொடரின் இறுதியும் மூன்றாவதுமான போட்டி நேற்றைய தினம் லாகூரில் அமைந்துள்ள கடாபி மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை குவித்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மில்லிர் 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.
165 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும், மொஹமட் ரிஷ்வான் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி - 20 தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM