கொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் நியூசிலாந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடு என்ற பெயரைப் பெற்றது.
அதன்பின்னர் நியூசிலாந்திற்கு வேறு நாடுகளில் இருந்து கொரோனாவுடன் சென்றவர்களையும் சரியாக கையாண்டு நோய் பரவலை தடுத்தது நியூசிலாந்து.
கொரோனாவை சிறப்பாக கையாண்ட காரணத்தால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் உள்நாட்டுக்குள் கொரோனா பரவல் இல்லாத நிலை நீடித்தது.
இந்த நிலையில், முதல்முறையாக நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
இந்த 3 ஆம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மாத்திரமே வீட்டுக்கு வெளியே செல்ல முடியும்.
ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவிருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM