எதிர்வரும் மாதங்கள் நெருக்கடியாகும் - எச்சரிக்கின்றார் அஜித் நிவார்ட் கப்ரால்

Published By: Digital Desk 4

14 Feb, 2021 | 07:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் எதிர்வரும் மாதங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை தோற்றுவிக்கும். மக்கள் மத்தியில் தொழில் துறைக்கான கேள்வி அதிகளவில் நிலவும்,தொழிற் துறையை ஊக்குவிக்க  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நிதி மூலதனச்சந்தை மற்றும் தொழில் வழங்கல் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

Image result for இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் virakesari

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் மாதங்களில் நெருக்கடியான நிலையினை எதிர்க் கொள்ள நேரிடும்.நாட்டின் பல துறைகள் இன்னும் முழுமையாக மீள திறக்கப்படவில்லை.

எதிர்வரும் காலங்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. செயற்திட்டங்களை பயனுடையதாக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

இவ்வருடம் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களுக்காக  ஒவ்வொரு துறையில் இருந்தும் வெளியேறுவார்கள். அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டை காட்டிலும் 2020 ஆம் ஆண்டு வியாபார தட்டுப்பாடு 2.0பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்கள் ஊடாக 2020 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் அதிக வருவாய் கிடைக்கப்   பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கமைய 813 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வருவாயாக கிடைக்கப் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33