'குவைத் பட்ஜெட் கேரியர் ஜசீரா ஏயர்வேஸ்' இலங்கையின் தலைநகருக்கு ஒரு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி மத்திய கிழக்கில் விமான சேவை வழங்கும் இடங்களுக்கான இணைப்புகளுடன் குவைத் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பிற்கான விமானங்கள் ஜசீராவின் புதிய ஏயர்பஸ் ஏ 320 நியோ விமானங்களின் விரிவாக்கக் கடற்படையில் இருக்கும், இவை அனைத்தும் ஹெப்பா ஏயர் வடிப்பான்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்காக ஜசீரா ஏயர்வேஸ் தனது விமானத்திலும், குவைத்தில் உள்ள ஜசீரா டெர்மினல் டி 5 யிலும் ஒவ்வொரு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
குறித்த விமான அட்டவணையை அறிவித்த ஜசீரா,
J9 551 செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.35 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
விமானம் J9 552 திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.05 மணிக்கு குவைத்தில் தரையிறங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM