பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கையில் 3,880 பேர் கைது

Published By: Vishnu

14 Feb, 2021 | 08:07 AM
image

நாடு முழுவதும் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 1,572 நபர்கள் உட்பட மொத்தம் 3,880 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மணிநேரங்களில் 494 காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட சுமார் 16,500 பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது குற்றங்கள் தொடர்பாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாக 983 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேலும் 672 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அதேநேரம் இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்காக எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செல்வாக்கின் கீழ் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக 518 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், குற்ற விகிதங்களைக் குறைப்பதற்காகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51