நான் பொலிஸாக இருந்திருந்தால் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கிறார் மேர்வின்

13 Feb, 2021 | 08:01 PM
image

சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது.

நான் அந்த இடத்தில் பொலீஸ் சீருடையில் இருந்திருந்தால் அத்தனை பேரினதும் கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது.  

அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். என்னை யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன் என ஆதங்கம் கொண்ட மேர்வின் சில்வா,  "ராஜபக்ஷக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டார்.

 சிங்களவருக்கு பிடித்த மாதிரியோ தமிழருக்கு பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த அரசாங்கம் தேவையில்லை.

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேச தேவையில்லை.

அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். அவற்றை பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என முன்னாளர் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20