அரசின் செயற்பாடுகள் நாட்டிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது - பிமல் ரத்நாயக்க

13 Feb, 2021 | 07:50 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக  மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து வினவியபோதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறவில்லை என்றும் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எனினும் நாமறிந்த வரையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த கேள்வியொன்றுக்கே பதிலளித்தார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அழுத்தம் மற்றும் சர்வதேச சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் பிரதமர் இவ்வாறு கூறியிருக்கலாம்.

எனினும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனின், ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இவ்விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வெளியிடுவதென்பது, எமது நாட்டிற்கு எதிரான செயற்படும் அமைப்புக்களுக்கு வாய்ப்பளிப்பதாகவே அமையும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51