இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றினுடாக 1,693 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக வெளிநாடுகளிலிருந்து 850 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து வருகை தந்த 108 பேரும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வருகை தந்த 102 பேரும் அடங்குவர்.
விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டும் உள்ளனர்.
இதேவேளை இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக 843 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டும் உள்ளனர்.
இந்த காலகட்டத்தில், 50 ஆயிரம் கிலோ கிராம் பொருட்கள் இறக்குமதியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 295,000 கிலோ கிராம் பொருட்கள் கட்டுநாயக்க, விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM