சுமந்திரனுக்காக பாராளுமன்றில் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

Published By: Digital Desk 4

10 Feb, 2021 | 06:18 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கின்றது.

அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு படையினர் நீக்கப்பட்டிருக்கின்றது. 

அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக்கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவதானது ஒழுக்கமான செயல் அல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கையின் பிரகாரமே அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் அவருக்கு இரண்டு பக்கத்தினாலும் அச்சுறுத்தல் இருந்திருக்கின்றது. தற்போதுள்ள நிலைமை அவரது உயிருக்கும் மிகவும் அச்சுறுத்தலாகும்.

அதனால் அவரது பாதுகாப்பு தாெடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு இருக்கின்றது. அதனால் நீங்கள் அதுதொடர்பான அறிவிப்பொன்றை பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டார் என்ற காரணத்தையும் அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கின்றது. 

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லை என்றே நினைக்கின்றேன். மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்.

பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக இருக்கின்றது. சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17