'அரசியல் கைதிகள் யாரும் சிறைச்சாலைகளில் இல்லை': சபையில் பிரதமர் மஹிந்த..!

Published By: J.G.Stephan

10 Feb, 2021 | 01:37 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ரா.சானக்கியன், நாட்டில் சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகள் எத்தனைபேர் இருக்கின்றனர்?, நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள், சிறைக்கைதிகளை விடுவிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடமிருக்கும் தனியாருக்கு சொந்தமான  காணிகளின் பிரமானம் தொடர்பாக கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையின் தண்டனைக்கோவைச்சட்டம் அல்லது நாட்டில் செயற்பட்டுவரும் வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகள் அல்லது சிறைக்கைதிகளில் அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை. 

அத்துடன் மாவட்ட மட்டத்தில் இராணுவத்தினருக்கு இருக்கும் காணி அளவு தொடர்பில், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு பதில் வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

அதனைத்தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு பிரிவுக்கு கீழ் தொடர்ந்து இருப்பது தொடர்பாக பிரதமருக்கு பதிலாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதிலளிக்கையில், யுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அரச மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான  97 வீதமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேசிய பாதுகாப்புக்காகவே எஞ்சிய வீதத்தினை வைத்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பில் யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02